தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினருக்கு DNT- சான்றிதழ் பெற்றுக்கொடுப்பதில் தீவிரம் காட்டும் ஊராட்சி மன்றத் தலைவர்.
நமது சமுதாய மாணவச்செல்வங்கள் மற்றும் சமுதாய மக்கள் அனைவரும் விரைந்து DNT சான்றிதழ் பெற்று மத்திய, மாநில அரசுகள் வழங்கும் உதவிகளையும், சலுகைகளையும் பெற்றிட வேண்டும் என்று வலுத்து வரும் கோரிக்கையை ஏற்று, நாமக்கல் மாவட்டம், பாப்பிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திரு.C.ஜெயக்குமார் (இவரை பற்றி மேலும் அறிய நீலநிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்)அவர்களின் தீவிர முயற்சியை அடுத்து, கடந்த 18.06.2020 விண்ணப்பித்து ஒருவார காலத்திற்குள் நால்வருக்கு DNT சான்றிதழ் பெற்றுக்கொடுத்து பணியை தீவிரப்படுத்தியுள்ளார். திரு.C.ஜெயக்குமார் அவர்களுக்கு நாமக்கல் தொட்டிய நாயக்ர் சமுதாய அறக்கட்டளை மற்றும் சென்னை, வீ.பா.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பிலும் வாழ்த்துக்கள்.