”ஒன்றிணைவோம் வா” தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுடன் நாமக்கல் உள்ளாட்சித் தலைவர்கள்
தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் “ஒன்றிணைவோம் வா” என்ற நிகழ்வின் வாயிலாக கழகத்தின் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் காணொலி மூலம் மாவட்ட வாரியாக பேசிவருகிறார். அதன் ஒருபகுதியாக நேற்று நாமக்கல் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அதில் இராசிபுரம் துணைப்பெருந்தலைவர் திருமதி.சந்திரா சிவக்குமார், (இவரைப்பற்றி மேலும் அறிய நீல நிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்) ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி.ஜெயமணி முருகேசன் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.முத்துலட்சுமி சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு உரையாடினர்.