விடுதலைக்களம் கோரிக்கைக்கு வெற்றி - புதிய பாடத்திட்டம் ரத்து.
+11/+12 பாடப்பிரிவுகளில் மாற்றம் செய்வதாக சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது. அதனால் பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவ-மாணவியர் மேற்கல்வி கற்கமுடியாத சூழல் ஏற்படும் எனவே அம்முடிவை மாநில அரசு கைவிட வேண்டும் என்று தமிழக அரசை 23.06.2020 அன்று வெளியிட்ட அறிக்கையில் விடுதலைக்களம் வலியுறுத்தியது. அதையேற்று பழைய முறையே தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அடித்தட்டு மக்களின் கல்வியை பறிக்க முயலும் முயற்சியை முறியடிக்கும் வகையில் விடுதலைக்களம் செயல்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் விடுதலைக்களத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.