விடுதலைக்களம் நிறுவனத்தலைவருடன் தொட்டிய நாயக்கர் சமுதாய தலைவர்கள் சந்திப்பு.
இன்று (13.07.2020) மாலை 6.30 மணிக்கு, விடுதலைக்களம் தலைமை அலுவலகத்தில் நிறுவனத்தலைவர் திரு.கொ.நாகராஜன் அவர்களை, நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை தலைவர் திரு.பழனிசாமி அவர்களின் தலைமையில், அதன் பொருளாளர் திரு.சின்னுசாமி, தலைமை நிலைய செயலாளர் திரு.பொ.மணி, துணைத்தலைவர் பொ.ஈஸ்வரன், அமைப்பு செயலாளர் திரு.மு.சரவணன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் திரு.பூ.சின்னசாமி, திருச்செங்கோடு திரு.நாகராஜ், திரு.அப்புசாமி ஆகியோர் சந்தித்தனர். அப்பொழுது விடுதலைக்களம் மாவட்ட துணைத்தலைவர் திரு.பூவரசி இராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
இக்கூட்டத்தில் சமுதாய நலன், முன்னெடுக்க வேண்டிய பணிகள், DNT சான்றிதழ் பெறுவது, விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது என விடுதலைக்களம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.