தமிழக அரசே - சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடு!- விடுதலைக்களம் நாளை ஆர்ப்பாட்டம்.
மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனையும், தெலுங்கு சமுதாய மக்களையும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் இழிவுபடுத்தி வரும் சமூக விரோத கும்பலை கைது செய்யக்கோரி அனைத்து மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் தொடர்ந்து புகார் மனு அளித்தும் தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், தென்காசி மாவட்டம், இராயகிரியில் விடுதலைக்களம் சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தெலுங்குபேசும் சமுதாய மக்களும், அமைப்புகளும் கலந்துகொள்ள விடுதலைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.