ஐஸ்வர்யாவின் படுகொலைக்கு நீதி,நிவாரணம் வழங்குக - விடுதலைக்களம் நாமக்கல்லில் போராட்டம்.
கோவை கவர நாயுடு சமுதாயத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஐஸ்வர்யா அவர்களின் படுகொலைக்கு நீதி மற்றும் நிவராணம் 50 லட்சம் வழங்கக்கோரி விடுதலைக்களம் சார்பில் இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நிறுவனத் தலைவர் கொ. நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.