கே.எஸ்.குட்டி திருவுருவப்படத்திற்கு துரைவைகோ மலர்தூவி மரியாதை!
மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுநாளான அக்'16-இல் கயத்தாரில் ஆண்டுதோறும் அன்னதானம் வழங்கி, மாலையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் எழுச்சிமிகு உரையாற்ற ஏற்பாடுகளை செய்துவந்த வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளையின் நிறுவன தலைவர் கே.எஸ்.குட்டி கடந்த 31.07.2021 அன்று இயற்கை எய்தினார். இதனையடுத்து நேற்று (03.08.2021) கோவில்பட்டியிலுள்ள அவரது இல்லத்திற்குச் சென்ற துரைவைகோ, அங்கு வைக்கப்பட்டிருந்த அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.