தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இவரல்லவோ உண்மையான புரட்சித்தலைவி! • கட்சிக் கூட்டத்திற்கு சென்று உயிரிழந்தால் அரசு வேலையா? உயர்நீதிமன்ற உத்தரவு என்ன? • சினிமா ரசிகராக இருங்கள்... வாழ்க்கையை நடிகர்களிடம் ஒப்படைக்காதீர்கள்! • நெடுஞ்சாலைத்துறை ஆ.சுஜிதா - JDO; மின்சார வாரியம் சு.ஆனந்தராஜ் -AE ஆக பணி நியமனம்! • இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்சில் இடம்பிடித்து மழலை தி.காரிஹா சாதனை! • இவரல்லவோ உண்மையான புரட்சித்தலைவி! • கட்சிக் கூட்டத்திற்கு சென்று உயிரிழந்தால் அரசு வேலையா? உயர்நீதிமன்ற உத்தரவு என்ன? • சினிமா ரசிகராக இருங்கள்... வாழ்க்கையை நடிகர்களிடம் ஒப்படைக்காதீர்கள்! • நெடுஞ்சாலைத்துறை ஆ.சுஜிதா - JDO; மின்சார வாரியம் சு.ஆனந்தராஜ் -AE ஆக பணி நியமனம்! • இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்சில் இடம்பிடித்து மழலை தி.காரிஹா சாதனை!

முக்கிய செய்திகள்

அனைத்தும் காண
பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன்
வாழ்க்கை வரலாறு

பாஞ்சாலங்குறிச்சியின் வீர மரபு, கிழக்கு இந்திய கம்பெனிக்கு எதிரான தன்னாட்சி குரல், கயத்தாரில் நிலைத்த தியாக நினைவு ஆகியவற்றை அழகான காலவரிசையில் படிக்கலாம்.

வரலாறு முழுவதும் படிக்க
வீரபாண்டிய கட்டபொம்மன்

பிரபலங்கள்

மேலும் காண

செய்திகள்

மேலும் காண
சினிமா ரசிகராக இருங்கள்... வாழ்க்கையை நடிகர்களிடம் ஒப்படைக்காதீர்கள்!
செய்தி துணுக்குகள்

சினிமா ரசிகராக இருங்கள்... வாழ்க்கையை நடிகர்களிடம் ஒப்படைக்காதீர்கள்!

08 Jul 2026

நெடுஞ்சாலைத்துறை ஆ.சுஜிதா - JDO; மின்சார வாரியம் சு.ஆனந்தராஜ் -AE ஆக பணி நியமனம்!
செய்தி துணுக்குகள்

நெடுஞ்சாலைத்துறை ஆ.சுஜிதா - JDO; மின்சார வாரியம் சு.ஆனந்தராஜ் -AE ஆக பணி நியமனம்!

08 Jul 2026

வியட்நாம் கடலில் உயிரிழந்த கம்பளத்தார்; உடலை மீட்க உதவிய துரைவைகோ
செய்தி துணுக்குகள்

வியட்நாம் கடலில் உயிரிழந்த கம்பளத்தார்; உடலை மீட்க உதவிய துரைவைகோ

05 Jul 2026

திருட வந்ததை மறந்து புத்தகத்தில் மூழ்கிய திருடன்!
செய்தி துணுக்குகள்

திருட வந்ததை மறந்து புத்தகத்தில் மூழ்கிய திருடன்!

30 Jun 2026

அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்!
செய்தி துணுக்குகள்

அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்!

26 Jun 2026

பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்!
செய்தி துணுக்குகள்

பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்!

26 Jun 2026

சடங்கு & சம்பிரதாயம்

மேலும் காண

விழுதுகள்

மேலும் காண

மகளிர் ஸ்பெஷல்

மேலும் காண

ஆன்மீகம்

மேலும் காண

மகளிர் ஸ்பெஷல்

மேலும் காண

YouTube செய்திகள்

மேலும் காண

புகைப்பட தொகுப்பு

விழுதுகள்

அரசியல்

ஒன்றியச் செயலாளர் பொறுப்பு வழங்குக; எடப்பாடியாரிடம் நேரில் வலியுறுத்தல்:

<p>2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. தமிழக அரசியலில் சுமார் 60 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த திமுக, அதிமுக ஆகிய இரு முக்கிய கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி, நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியையும் அமைத்துள்ளது.</p><p>புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் புதிய பரபரப்புகளையும் எதிர்பாராத அரசியல் நகர்வுகளையும் சந்தித்து வருகிறது. அரசை நிலைநிறுத்துவதற்கான ஆதரவு, கூட்டணி மாற்றங்கள், கட்சிகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைகள் என அரசியல் சூழல் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/lbuXCtxCNdM" width="100%" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>இதற்கிடையில், அதிமுகவிலும் உள்கட்சி பரபரப்பு ஏற்பட்டது. கட்சியின் சில முக்கிய சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மாற்று அரசியல் நிலைப்பாடுகளை எடுத்ததாக கூறப்பட்ட நிலையில், கட்சிக் கட்டுப்பாட்டை நிலைநிறுத்தும் வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டார். கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டதோடு, கொறடா உத்தரவை மீறியதாகக் கூறப்பட்ட சில சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.</p><p><span style="font-size: 1rem;">இதன் பின்னர், கட்சியில் ஏற்பட்ட குழப்ப நிலை படிப்படியாக சீரடைந்தது. கட்சிப் பொறுப்புகளை இழந்த பலர் மீண்டும் தலைமையிடம் விளக்கம் அளித்து பொறுப்புகளைப் பெற்றனர். இருப்பினும், சில அமைப்புப் பொறுப்புகள் தொடர்ந்து காலியாகவே இருந்து வருகின்றன.</span></p><p>இந்நிலையில், காலியாக உள்ள மாவட்ட மற்றும் ஒன்றிய அமைப்புப் பொறுப்புகளை நிரப்பும் பணியில் அதிமுக தலைமை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, விருதுநகர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றியச் செயலாளர் பதவியும் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/1UBRdtY_rM4" width="100%" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>இந்தப் பதவியைப் பெறும் நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் விருதுநகர் கிழக்கு மாவட்ட இலக்கிய அணி துணைச்செயலாளர் அ. காசிராஜன். இதற்காக அண்மையில் சேலத்தில் உள்ள பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் இல்லத்தில் அவரை சந்தித்து, கட்சியின் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் தனது விருப்பத்தை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.</p><p>அரசியல், மேடைப்பேச்சு மற்றும் எழுத்துத் துறைகளில் ஆர்வமிக்கவரான அ. காசிராஜன், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வருகிறார். செட்டிகுறிச்சி ஊராட்சி மன்றத் தலைவராகவும் பணியாற்றியுள்ள அவர், 2017 விளாத்திக்குளம் இடைத்தேர்தல், 2021 மற்றும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார்.</p><p>நீண்டகாலமாகக் கழகப் பணியில் ஈடுபட்டு வரும் அ. காசிராஜன், தற்போது அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றியச் செயலாளர் பொறுப்பைப் பெற தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவரது அரசியல் பயணமும், இந்த முயற்சியும் வெற்றியடைய வாழ்த்துகள்.</p>

மேலும் படிக்க

செய்தி துணுக்குகள்

அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்!

<p>விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (Government Arts and Science College, Aruppukkottai) முதல்வராக சிவகாசியைச் சேர்ந்த முனைவர் செ.கிளிராஜ் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு சமுதாயத் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.</p><p>விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள வி.சொக்கலிங்கபுரம் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட முனைவர் செ.கிளிராஜ், திரு. செல்வராஜ் – திருமதி லட்சுமி அம்மாள் தம்பதியினரின் மகன் ஆவார். சிவகாசியில் அமைந்துள்ள அய்யா நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றார்.</p><p>1998ஆம் ஆண்டு அருப்புக்கோட்டையிலுள்ள எஸ் பி கே கல்லூரியில் விரிவுரையாளராக தனது கல்விப் பணியைத் தொடங்கிய அவர், பின்னர் இராஜபாளையம் ராஜூஸ் கல்லூரியில் சில ஆண்டுகள் பணியாற்றினார்.</p><p>2007ஆம் ஆண்டு இராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரில் உதவிப் பேராசிரியராக அரசு பணியில் சேர்ந்தார். தொடர்ந்து 2016ஆம் ஆண்டு சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு மாற்றலாகி, தமிழ்த்துறைத் தலைவராக சிறப்பாகப் பணியாற்றி வந்தார்.</p><p>தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள முனைவர் செ.கிளிராஜ், "தமிழ் இலக்கணம் அறிவோம்" மற்றும் "தேர்வு நோக்கில் இலக்கிய வரலாறு" ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவரது "தமிழ் இலக்கணம் அறிவோம்" நூலுக்கு தமிழக அரசின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும், அந்த நூல் சென்னை கன்னிமாரா பொது நூலகம் மற்றும் தமிழக அரசின் அனைத்து பொது நூலகங்களிலும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.</p><p>இந்நிலையில், தமிழக அரசால் அருப்புக்கோட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வராக முனைவர் செ.கிளிராஜ் நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, 29.05.2026 அன்று முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.</p><p>அருப்புக்கோட்டை – பந்தல்குடி சாலையில் அமைந்துள்ள இக்கல்லூரி 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, இருபாலரும் பயிலும் அரசு உயர்கல்வி நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது. ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் இக்கல்லூரியில் பி.ஏ. (தமிழ், ஆங்கிலம்), பி.காம். (சி.ஏ.), பி.எஸ்்சி. கணிதம் உள்ளிட்ட பல்வேறு இளநிலைப் பட்டப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.</p><p>முனைவர் செ.கிளிராஜ் அவர்களுக்கு த.மீனாட்சி எம்.ஏ., பி.எட்., என்ற மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். மூன்று மகள்களும் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். த.மீனாட்சி அவர்கள் காரியாபட்டி அருகேயுள்ள பாப்பணம் அரசுப்பள்ளியில் ஆசிரியராகவும், மகள்களில் இருவர் பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.</p><p>முனைவர் செ.கிளிராஜ் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்றதையொட்டி, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் செ.இராதாகிருஷ்ணன், அருப்புக்கோட்டை இராஜகம்பள சமுதாய நலச்சங்கச் செயலாளர் ஆர்.கண்ணன், கட்டபொம்மன் கல்வி அறக்கட்டளைத் தலைவர் வை.மலைராஜன் மற்றும் நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளைத் தலைவர் மு.பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.</p>

மேலும் படிக்க