தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி!

முக்கிய செய்திகள்

அனைத்தும் காண
Kattabomman Varalaru

வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கை வரலாறு

பாஞ்சாலங்குறிச்சியின் வீர மரபு, கிழக்கு இந்திய கம்பெனிக்கு எதிரான தன்னாட்சி குரல், கயத்தாரில் நிலைத்த தியாக நினைவு ஆகியவற்றை அழகான காலவரிசையில் படிக்கலாம்.

வரலாறு முழுவதும் படிக்க
வீரபாண்டிய கட்டபொம்மன்

பிரத்யேக வரலாறு பக்கம்

பிரபலங்கள்

மேலும் காண

செய்திகள்

மேலும் காண

சடங்கு & சம்பிரதாயம்

மேலும் காண

விழுதுகள்

மேலும் காண

மகளிர் ஸ்பெஷல்

மேலும் காண

ஆன்மீகம்

மேலும் காண

மகளிர் ஸ்பெஷல்

மேலும் காண

YouTube செய்திகள்

மேலும் காண

புகைப்பட தொகுப்பு

விழுதுகள்

செய்தி துணுக்குகள்

ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்!

<p>பரிணாம வளர்ச்சியில், மனித மூளை உச்சத்தில் இருப்பதாக நாம்  நம்புகிறோம். அதில் ஓரளவு உண்மை இருந்தாலும், மொத்தமாக அப்படிச் சொல்லிவிட முடியாது. </p><p>பூமியில் வாழும் உயிரினங்களில் ஒக்டோபஸுக்குத்தான் அதிக மூளைகள் இருக்கின்றன. ஒக்டோபஸ்களுக்கு 3 இதயங்களும், 9 மூளைகளும் உள்ளன. இரண்டு இதயங்கள் செவுள்களுக்கு ரத்தத்தைச் செலுத்தவும், மூன்றாவது இதயம் உடல் உறுப்புகளுக்கு ரத்தத்தை விநியோகிக்கவும் உதவுகின்றன. தலைப் பகுதியில் ஒரு பிரதான மூளையும் (Central Brain) , 8 கரங்களின் அடிப்பகுதியில் தலா ஒரு சிறிய மூளையும் (Mini Brains) அமைந்துள்ளன.இவற்றின் ரத்தத்தில் இரும்புச் சத்திற்குப் பதிலாக தாமிரம் (Copper) இருப்பதால், இவற்றின் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்</p><p>ஒக்டோபஸ்ஸின் பிரதான மூளை, கண்கள் இரண்டிற்கு நடுவே இருக்கின்றது. அங்கே, கண்களின் பின்னால், அடர்த்தியான நரம்பு மண்டலங்களைக் கொண்ட இரண்டு பெரிய  ‘பார்வை மடல்கள்’  (Optic Lobes) இருக்கின்றன. இவை இரண்டும், பிரதான மூளையுடன் தொடர்புடன் இருப்பதால், அவற்றையும் மூளையென்று நம்பி, மொத்தமாக மூன்று மூளைகள் என்று தவறாகச் சிலர் சொல்கிறார்கள். ஆனால், அவை மூளைகளல்ல. சாதாரணமாக மூளைக்குள் இருக்க வேண்டிய பகுதிகள். பார்வையின் தேவைக்காகப் பிரிந்து தனியே இருக்கின்றன. பார்வைக்குரிய தனித்துவமான இரண்டு பகுதிகள். மூளையுடன் தொடர்புடன் இருப்பவை. ஆனாலும் அவை மூளைகள் அல்ல. </p><p>பிரதான மூளையின் ஆட்சி இல்லாமல், சுயாதீனமாகச் செயல்படக்கூடிய எட்டுத் தனித்தனி மூளைகள், ஒக்டோபஸின் எட்டுக் கால்களிலும் (அல்லது கைகளிலும்) இருக்கின்றன. ஒக்டோபஸ் உறங்கிக் கொண்டிருந்தாலும், அவற்றின் கால்கள் (அல்லது கைகள்) உறங்காமல் தன்னிச்சையாகச் செயல்பட்டு இரைகளைப் பிடித்துச் சுவைக்கவும் செய்கின்றன. இந்தியாவில் ஒரு ஒன்றிய அரசும், பல மாநில அரசுகளும் இருப்பதுபோல, ஒக்டோபஸுக்கு மூளைகள் அமைந்திருக்கின்றன. </p><p>ஒக்டோபஸில் ஒரு மூளை உறங்கும்போது, மற்ற மூளைகள் தன்னிச்சையாக இயங்குமென்று சொன்னேனல்லவா? இதுபோல, ஒரே மூளையை, இரண்டாகப் பிரித்து, பாதி மூளையால் உறங்கவும், பாதி மூளையால் விழித்திருந்து செயல்படவும் சில உயிரினங்களால் முடியும் என்பதுதான் ஆச்சரியம். மனிதனால் செய்ய முடியாத விந்தை.  </p><p>திமிங்கிலம், டொல்பின் போன்ற மீன்களும், ‘ஃபிரிகேட்’ (Frigate Bird) போன்ற பறவைகளும், இந்த ஒற்றை அரைமூளை உறக்கத்தில் (Unihemispheric Sleep) ஈடுபடுகின்றன. </p><p>திமிங்கிலங்களும், டொல்பின்களும் ஆழ்கடலில் நீந்திக் கொண்டிருந்தாலும், சுவாசிப்பதற்கு அவை கடல் மேற்பரப்பிற்கு வரவேண்டும். ஒருவேளை, அவை ஆழ்கடலில் நீந்தும்போது உறங்கிவிட்டால், அவற்றிற்கான சுவாசம் கிடைக்காமல் இறந்து போய்விடும் சாத்தியம் உண்டு. அதற்காக இயற்கை உருவாக்கியிருக்கும் பொறிமுறைதான் இந்த அரைமூளைத் தூக்கம். மூளையின் அரைவாசி உறங்கியபடி அதன் உடல் உறுப்புகளுக்கு ஓய்வைக் கொடுக்க, மற்ற அரைவாசி மூளை விழித்திருந்து சுவாசத்தையும், எதிரிகளின் ஆபத்தையும் கவனித்துக் கொள்கிறது. </p><p>இதுபோல, ஃபிரிகேட் போன்ற பறவைகள் தொடர்ச்சியாகப் பத்து நாட்களுக்கு மேல் தரையைத் தொடாமல் பறந்து கொண்டேயிருக்கின்றன. அவ்வேளைகளில், அவை பாதி மூளையை உறங்குவதற்கும், மறுபாதி மூளையைப் பறத்தலின் தொடர்ச்சிக்கும் பயன்படுத்துகின்றன. ஆனாலும் அது முழுமையான நித்திரை இல்லை. குறுகிய குட்டித் தூக்கம் (Micro sleep) மட்டும்தான். </p><p>மனிதனின் மூளையால் அளப்பரிய செயல்களையும், சிந்தனைகளையும் செய்ய முடிந்தாலும், இவ்வுயிரினங்களின் மூளைப் பொறிமுறையை அடைய  முடியவில்லை. அவை செய்யும் செயல்கள் அசாத்தியமானவை. மனிதனால் இப்படி மூளையைப் பாதியாகச் செயல்படுத்த ஏன் முடியவில்லை? மனித மூளையும் இரண்டு பகுதிகளாகப் பிரிந்து செயல்படுவதுதான். ஆனால், அவற்றிற்கான பணிகள் தனித்துவமானவை. ஆனாலும், அவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று இறுக்கமான பிணைப்பைக் கொண்டவை. அதனால் இப்படிப் பிரிந்து செயல்பட முடியவில்லை. </p><p><b>நன்றி: ராஜ்சிவா.</b></p>

மேலும் படிக்க

கட்டுரைகள்

இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம்.

<p>உலக வரலாற்றில் பல போர்கள் மாதக்கணக்கிலும், வருடக்கணக்கிலும் நடந்திருக்கின்றன. ஆனால், வெறும் இரண்டே மணி நேரத்தில் ஒரு மாபெரும் சாம்ராஜ்யம் ஒட்டுமொத்தமாகத் தரைமட்டமான கதை தெரியுமா? ஹாலிவுட் படங்களை விட மோசமான ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் இது!</p><p>அது ஆகஸ்ட் 29, 1526. இடம்: ஹங்கேரியின் மோகாக்ஸ் (Mohács) சமவெளி.</p><p>ஒரு பக்கம் உஸ்மானியப் பேரரசின் மாபெரும் சுல்தான் 'சுலைமான் தி மேக்னிஃபிசென்ட்' (Suleiman the Magnificent / சுலைமான் அல்-கானூனி). மறுபக்கம், தங்களை 'ஐரோப்பாவின் பாதுகாவலர்கள்' என்று மார்தட்டிக் கொண்டிருந்த ஹங்கேரியப் பேரரசர் இரண்டாம் லூயிஸின் (King Louis II) மாபெரும் படை.</p><p>ஐரோப்பியர்களுக்கு எப்போதுமே ஒரு அதீத மிதப்பு உண்டு. "நாங்க தலைமுதல் கால் வரை இரும்புக் கவசம் போட்ட மாவீரர்கள்!, எங்க கனரக குதிரைப்படையை யாராலும் அசைக்க முடியாது" என்ற நினைப்பு. உஸ்மானியர்களோ நவீன ரக போரியல் உத்திகளோடு களமிறங்கியிருந்தார்கள்.</p><p>போர் முரசு கொட்டப்பட்டது. ஹங்கேரிய நைட்டுகள் தங்கள் கனரக குதிரைகளில் சீறிப் பாய்ந்தனர். உஸ்மானியப் படையின் முன்வரிசை அவர்களது தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் மெதுவாகப் பின்வாங்கியது.</p><p>அவ்வளவுதான்! "ஹாஹா... சுலைமான் படை பயந்து ஓடுகிறது! விடுங்கடா அடிச்சுத் தூக்குவோம்!" என்று ஹங்கேரியப் படை வெறிபிடித்துக் கொண்டு கண்மூடித்தனமாக உஸ்மானியப் படைக்குள் ஊடுருவியது.</p><p>இதுதான் அவர்கள் செய்த மிகப் பெரிய தப்பு. உஸ்மானியர்களின் வழக்கமான தந்திர வலையில் எலி தானாக வந்து சிக்கியது!</p><p>உஸ்மானியப் படை திடீரென இரண்டாக விலகியது. அங்கே... ஹங்கேரியர்களுக்குக் காத்திருந்தது ஒரு மரணப் பொறி! சங்கிலியால் பிணைக்கப்பட்ட பிரம்மாண்டமான உஸ்மானிய பீரங்கிகள் மற்றும் ஆயிரக்கணக்கான 'ஜானிஸரி' (Janissaries - உஸ்மானியர்களின் சிறப்புப் படை) துப்பாக்கி ஏந்திய வீரர்கள்! (இந்தியத் துணைக்கண்டம் அதுவரை கண்டிராத ஒரு மாபெரும் ஆயுதமான பீரங்கிகளைப் பாபர் பானிபட்டில் பயன்படுத்திய அதே 1526-ம் ஆண்டுதான் இது).&nbsp;&nbsp;</p><p>ஹங்கேரியர்கள் சுதாரிப்பதற்குள் பீரங்கிகள் ஒரே நேரத்தில் நெருப்பைக் கக்கின. "பூம்... பூம்..." என்ற அந்தப் பயங்கரச் சத்தத்தில் ஹங்கேரியர்களின் இரும்புக் கவசங்கள் எல்லாம் அப்பளம்போல நொறுங்கின. துப்பாக்கிக் குண்டுகள் மழையாகப் பொழிந்தன.</p><p>வெறும் இரண்டே மணி நேரம்! ஆமாம், நீங்கள் படிப்பது நூறு சதவீதம் உண்மை. வெறும் 120 நிமிடங்களில், ஐரோப்பாவின் மாபெரும் ஹங்கேரியப் படை சுக்குநூறாக உடைக்கப்பட்டது.</p><p>தப்பியோடிய ஹங்கேரிய அரசர் லூயிஸ், ஒரு சேற்றுப் பள்ளத்தில் குதிரையோடு விழுந்து, கனமான கவசத்தின் எடையால் எழுந்திருக்க முடியாமல் மூழ்கிப் பரிதாபமாக இறந்துபோனார். தளபதிகள், ஆயர்கள், பிரபுக்கள் என ஹங்கேரியின் ஒட்டுமொத்த ஆளுமைகளும் அந்த ஒற்றை மதியப் பொழுதில் மடிந்து போனார்கள்.</p><p>ஒரு பக்கம் பானிபட்டில் பாபர் இந்தியாவை வளைத்த அதே 1526-ல், இங்கே ஐரோப்பாவின் மையப்பகுதியான சென்ட்ரல் ஐரோப்பாவின் கதவுகளை சுலைமான் எட்டி உதைத்துத் திறந்தார். அகங்காரத்தோடு களமிறங்கிய ஐரோப்பியர்களுக்கு, சுலைமான் கொடுத்த அந்த இரண்டு மணி நேர ட்ரீட்மெண்ட், உஸ்மானியர்களுக்கு அடுத்த 150 ஆண்டுகளுக்கு மத்திய ஐரோப்பாவில் அசைக்க முடியாத ஆதிக்கத்தைக் கொடுத்தது. ஹங்கேரி என்றொரு தனி நாடு பல நூற்றாண்டுகளுக்கு உலக வரைபடத்திலிருந்தே காணாமல் போனது.</p><p>ஆணவம் எப்போதுமே நவீன உத்திகள் முன்னால் ஒரு நாள் மண்ணைக் கவ்வும் என்பதற்கு மோகாக்ஸ் போர்க்களம் ரத்தம் தோய்ந்த சாட்சி!</p><p><b>Thanks: A.I.Naseer.</b></p>

மேலும் படிக்க