தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!

முக்கிய செய்திகள்

அனைத்தும் காண
பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன்
வாழ்க்கை வரலாறு

பாஞ்சாலங்குறிச்சியின் வீர மரபு, கிழக்கு இந்திய கம்பெனிக்கு எதிரான தன்னாட்சி குரல், கயத்தாரில் நிலைத்த தியாக நினைவு ஆகியவற்றை அழகான காலவரிசையில் படிக்கலாம்.

வரலாறு முழுவதும் படிக்க
வீரபாண்டிய கட்டபொம்மன்

பிரபலங்கள்

மேலும் காண

செய்திகள்

மேலும் காண
புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்!
செய்தி துணுக்குகள்

புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்!

16 Jul 2026

சினிமா ரசிகராக இருங்கள்... வாழ்க்கையை நடிகர்களிடம் ஒப்படைக்காதீர்கள்!
செய்தி துணுக்குகள்

சினிமா ரசிகராக இருங்கள்... வாழ்க்கையை நடிகர்களிடம் ஒப்படைக்காதீர்கள்!

08 Jul 2026

நெடுஞ்சாலைத்துறை ஆ.சுஜிதா - JDO; மின்சார வாரியம் சு.ஆனந்தராஜ் -AE ஆக பணி நியமனம்!
செய்தி துணுக்குகள்

நெடுஞ்சாலைத்துறை ஆ.சுஜிதா - JDO; மின்சார வாரியம் சு.ஆனந்தராஜ் -AE ஆக பணி நியமனம்!

08 Jul 2026

வியட்நாம் கடலில் உயிரிழந்த கம்பளத்தார்; உடலை மீட்க உதவிய துரைவைகோ
செய்தி துணுக்குகள்

வியட்நாம் கடலில் உயிரிழந்த கம்பளத்தார்; உடலை மீட்க உதவிய துரைவைகோ

05 Jul 2026

திருட வந்ததை மறந்து புத்தகத்தில் மூழ்கிய திருடன்!
செய்தி துணுக்குகள்

திருட வந்ததை மறந்து புத்தகத்தில் மூழ்கிய திருடன்!

30 Jun 2026

அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்!
செய்தி துணுக்குகள்

அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்!

26 Jun 2026

சடங்கு & சம்பிரதாயம்

மேலும் காண

விழுதுகள்

மேலும் காண

மகளிர் ஸ்பெஷல்

மேலும் காண

ஆன்மீகம்

மேலும் காண

மகளிர் ஸ்பெஷல்

மேலும் காண

YouTube செய்திகள்

மேலும் காண

புகைப்பட தொகுப்பு

விழுதுகள்

அரசியல்

அதிமுக ஒன்றியச் செயலாளராக திரு.டி.சிவசாமி நியமனம்!

<p>அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) கோவை புறநகர் மத்திய மாவட்டம், மதுக்கரை ஒன்றியச் செயலாளராக வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பர்பிள் கிளப் நன்கொடையாளரும், அக்கட்சியின் புரட்சித் தலைவி பேரவைச் செயலாளருமான திரு. டி. சிவசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அதிமுக பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ளார்.</p><p>கோவை மாவட்டம் மாசேகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த டி. சிவசாமி, சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பர்பிள் கிளப் நன்கொடையாளராகவும், அதிமுகவில் கோவை புறநகர் மத்திய மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளராகவும் தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளார்.</p><p>இந்நிலையில், கட்சிப் பணியில் நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வந்த அவரது சேவையைப் பாராட்டி, கோவை புறநகர் மத்திய மாவட்டம் மதுக்கரை ஒன்றியச் செயலாளராக அவரை அதிமுக பொதுச்செயலாளர் நியமித்துள்ளார்.</p><p>இந்த நியமனத்தைத் தொடர்ந்து, டி. சிவசாமிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் செ. இராதாகிருஷ்ணன், கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் கே.டி. மோகன்ராஜ், மகளிரணி அமைப்பாளர் பாக்கியலட்சுமி, வடக்கு மாவட்ட செயலாளர் மனோகரன், பொருளாளர் கணேசன் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து, புதிய பொறுப்பில் சிறப்பாக செயல்பட வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர்.</p>

மேலும் படிக்க

செய்தி துணுக்குகள்

வியட்நாம் கடலில் உயிரிழந்த கம்பளத்தார்; உடலை மீட்க உதவிய துரைவைகோ

<p>வியட்நாம் துறைமுகத்திலிருந்து சீனாவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சர்வதேச சரக்குக் கப்பலில் பணியாற்றிய தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெய்கண்ணன் (34) திடீரென உயிரிழந்தார். வெளிநாட்டில் ஏற்பட்ட இந்த துயரச் சம்பவத்துக்குப் பின்னர், அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர பல்வேறு நிர்வாகச் சிக்கல்கள் ஏற்பட்ட நிலையில், மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ மேற்கொண்ட விரைவான நடவடிக்கையால் உடல் பாதுகாப்பாக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக ஜெய்கண்ணன் குடும்பத்தினரும், இராஜகம்பள சமுதாயத்தினரும் துரை வைகோவுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளனர்.</p><p><b>கடலில் நிகழ்ந்த சோகம்:</b></p><p>தூத்துக்குடி மாவட்டம் கட்டபொம்மன் நகரைச் சேர்ந்த கல்வெட்டு செல்வத்தின் இளைய மகன் ஜெய்கண்ணன், லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் புகழ்பெற்ற சர்வதேச கப்பல் மேலாண்மை நிறுவனமான Zodiac Maritime Agencies-இல் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சங்கீதா மயில். இவரது மூத்த சகோதரர் கணேஷ், ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.</p><p>கடந்த 27.04.2026 அன்று, நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பல் வியட்நாம் துறைமுகத்திலிருந்து சீனாவை நோக்கிப் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது ஜெய்கண்ணன் பணிக்கு வராததால், சக ஊழியர்கள் அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்த்தனர். அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாகக் கருதி எழுப்பாமல் திரும்பிச் சென்றனர்.</p><p>இதற்கிடையில் கப்பல் வியட்நாமிலிருந்து புறப்பட்டுவிட்டது. பின்னர் மீண்டும் அறைக்குச் சென்று பார்த்தபோது, அதே நிலையில் இருந்த ஜெய்கண்ணனை எழுப்ப முயன்றபோதுதான் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.</p><p><b>கப்பலிலேயே பாதுகாக்கப்பட்ட உடல்: </b></p><p>கப்பல் ஏற்கனவே கடலுக்குள் பயணித்துக் கொண்டிருந்ததால் உடனடியாக கரை சேர முடியவில்லை. மேலும், கப்பலில் உடலைப் பாதுகாக்கும் சிறப்பு வசதிகள் இல்லாததால்,மீன்கள் வைக்கப் பயன்படுத்தப்படும் குளிர்சாதனப் பெட்டியில் (Freezer) அவரது உடலை பாதுகாத்து வந்தனர்.</p><p>இறுதியாக 08.05.2026 அன்று கப்பல் சீனத் துறைமுகத்தை வந்தடைந்ததும், ஜெய்கண்ணன் உடல் கரைக்கு இறக்கப்பட்டது.</p><p><b>துரை வைகோவின் உடனடி தலையீடு: </b></p><p>ஜெய்கண்ணன் உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவருவதற்காக அவரது குடும்பத்தினர் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோவை அணுகினர்.</p><p>இதையடுத்து துரை வைகோ, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு இந்த விவகாரத்தை உடனடியாகக் கொண்டு சென்று, உடலை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும், தேவையான ஆவணங்கள் மற்றும் அலுவலக நடைமுறைகளை விரைந்து நிறைவு செய்து இந்தியாவிற்கு அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.</p><p>அதன் பேரில் சீனாவில் ஜெய்கண்ணன் உடல் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, தேவையான அனைத்து நிர்வாக நடைமுறைகளும் நிறைவு செய்யப்பட்டன.</p><p><b>இரண்டு மாதங்களுக்குப் பிறகு சொந்த ஊர் திரும்பிய உடல்:</b></p><p> சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்னர், 21.06.2026 அன்று ஜெய்கண்ணன் உடல் விமானம் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான தூத்துக்குடிக்குக் கொண்டு செல்லப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.</p><p>உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர், ஜெய்கண்ணன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.</p><p>குடும்பத்தினரை நெகிழச் செய்த மனிதநேயம் உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர தேவையான அனைத்து உதவிகளையும் செய்ததோடு மட்டுமல்லாமல், இறுதி மரியாதையில் பங்கேற்க தனது கட்சி நிர்வாகிகளையும் துரை வைகோ அனுப்பி வைத்திருந்தது ஜெய்கண்ணன் குடும்பத்தினரை நெகிழ்ச்சியடையச் செய்தது.</p><p> </p><p>தங்களது இக்கட்டான சூழலில் உறுதுணையாக இருந்து உதவிய துரை வைகோவுக்கு ஜெய்கண்ணன் குடும்பத்தினரும், இராஜகம்பள சமுதாயத்தினரும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர்.</p>

மேலும் படிக்க