ஜமீன் ராமபட்டிணம் தேர்திருவிழாவில் கம்பளத்தாரின் ஒயிலாட்டம்!
கோவை மாவட்டம் ஜமீன் ராமபட்டணம் கிராமத்தில் அருள்மிகு உச்சிமாகாளி அம்மன், அருள்மிகு கருப்பசாமி கோவில் சித்திரை தேர்திருவிழா கடந்த வாரம் தொடங்கி ஒருவாரகாலம் நடைபெற்றது இதில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த கம்பளத்தார் சமுதாய இளைஞர்கள் பங்கேற்று பாரம்பரிய தேவராட்டம், ஒயிலாட்டம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தினர். நேற்று மாலை ஈச்சனாரி ஒயிலாட்டக் குழுவினரின் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாக்குழுவினரை ராமபட்டினம் ஜமீன்தார் திரு.விஷ்ணுகாந்த சக்திவேல் ராஜா, திருமதி.சுதா விஷ்ணுகாந்த சக்திவேல் ராஜா, ஊர் நாயக்கர் திரு.ராஜமூர்த்தி வரவேற்று வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.