அஸ்தமனம் காணா பேரரசை ஆட்டம் காணச்செய்தவர் விருப்பாச்சி கோபால நாயக்கர்- AMR.துரைசாமி அசத்தல் பேச்சு
சூரியன் அஸ்தமனம் காணாத அளவிற்கு உலகில் பரந்து விரிந்த நிலப்பரப்பை ஆட்சி செய்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு பெரும் சவாலாகவும், பிரிட்டிசாருக்கு எதிராக பல்வேறு குறுநில மன்னர்களை படைதிரட்டி, பல்வேறு கட்டங்களில் நடைபெற்ற சண்டையில் தோல்விகளை பரிசளித்து செய்வதறியாது திகைக்கச் செய்தவர் விருப்பாச்சி மாமன்னர் கோபால நாயக்கர்.
இந்திய வரலாற்றில் ஆங்கிலேயர்களிடம் இழந்த மண்ணை மீட்டு, மீண்டும் ஆட்சி செய்த பெருமை, அதுவும் ஒரு பெண்ணுக்கு மட்டுமே அந்தப்பெருமை உண்டென்றால். அது வீரமங்கை வேலுநாச்சியார் மட்டுமே. கணவனையும், நாட்டையும் இழந்து வந்த அரசியை, போர்க்களம் காணச்செய்து, வரலாற்றில் அழியாப்புகழை பெறுவதற்கு காரணமாக இருந்தவர் விருப்பாச்சியார். அப்படி புகழ்பெற்ற வீரமகனின் வாழ்க்கை வரலாற்றை திரு.AMR.துரைசாமி அவர்களின் வெங்கலக்குரலில் கேளுங்கள்....