இடஒதுக்கீடு வழங்கிய கலைஞருக்கு நினைவஞ்சலி!
முன்னாள் முதல்வர், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 3-ஆம் ஆண்டு நினைவுநாளில் இராஜகம்பளத்தார் சமூகம் நன்றியுடன் நினைவுகொள்கிறோம்.
பாஞ்சாலங்குறிச்சி நினைவுக்கோட்டை அமைத்து கம்பளத்தார் இனத்தின் முகவரியை மீட்டவர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தொட்டியநாயக்கர் பிரிவை சேர்த்து லட்சோப லட்சம் இளைஞர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தவர், இலவச மின்சாரம், விவசாயக்கடன் தள்ளுபடி என வரலாற்றுச்சிறப்புமிக்க நடவடிக்கைகளால் விவசாயக்குடிகளை பேரழிவிலிருந்து காப்பாற்றி டாக்டர். கலைஞருக்கு கம்பளத்தாரின் புகழஞ்சலி.
தமிழகம் முழுவதும் பணியாற்றும் கம்பளத்து உடன்பிறப்புகள் அவரவர் பகுதிகளில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கலைஞரின் நினைவை அனுசரித்து வருகின்றனர்.