🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அரசியல் கணக்குகளை அசைக்கும் கூட்டணி!

நேற்று (15.08.2021) நடைபெற்ற 75-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.  திருப்பூர், கரூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு சமூகநீதி கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள 115 சமுதாயங்களைச் சேர்ந்த சமுதாய தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதேபோல் சுதந்திரப்போராட்ட வீரர்களான வ.ஊ.சி, திருப்பூர் குமரன்,  பசும்பொன் முத்துராமலிங்க தேவர் போன்ற பல்வேறு தலைவர்களின் சிலைகளுக்கு சமூகநீதி கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள சமுதாய தலைவர்கள் கலந்துகொண்டது சமூக நல்லிணக்கத்திற்கு அடித்தளமாக அமைந்தது.


இந்நிகழ்வில் கலந்துகொள்ளவந்த பிறசமுதாய தலைவர்களை வரவேற்று பரஸ்பரம் அன்பை பறிமாறிக்கொண்டது கலந்துகொண்டவர்களுக்கு உற்சாகத்தை அளித்தது. இந்நட்பின் மூலம் வரும் உள்ளாட்சி மன்றத்தேர்தலில் அரசியல் தாண்டி இடஒதுக்கீடு பிரச்சினையில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved