கம்பளத்தார் மீது வன்கொடுமை பொய்வழக்கா? - பொங்கியெழுந்த விடுதலைக்களம்!
கரூர் மாவட்டம், வெங்கக்கல் கிராமத்தில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினருக்கு சொந்தமான கோவில் நிலத்தில் தலித் அமைப்புகள் கொடிகம்பமும், பெயர் பலகையும் வைத்திருந்தனர். ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் ஆத்திரமடைந்த தலித் அமைப்பினர் தொட்டியநாயக்கர் சமுதாயத்தினர் மீது காவல் நிலையத்தில் வன்கொடுமை சட்டத்தில் புகார் அளித்தனர். தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் மீதான இந்த பொய் புகாருக்கு எதிராக விடுதலைக்களம் கட்சி நிறுவன தலைவர் திரு.கொ.நாகராஜன், கரூர் மாவட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக நிர்வாகிகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட தொட்டி நாயக்கர் சமூகத்தினர் கரூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்தி மனு அளித்தனர்.