கட்டபொம்மன் வாரிசுகள் கொண்டாடிய சுதந்திரதின விழா!
கடந்த (15.08.2021) அன்று கயத்தாறுலுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 75-வது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற வீரபாண்டிய கட்டபொம்மன் நேரடி வாரிசுகளும், நேரடி வாரிசுகள் டிரஸ்ட் நிர்வாகிகள் Dr.ராஜேஸ்வரி MD மற்றும் திருமதி.இந்துமதி சேர்மராஜன் ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர். மேலும் டிரஸ்ட் சார்பில் பள்ளியில் கட்டியுள்ள நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறைகளை திறந்து வைத்தனர். அதேபோல் வீரபாண்டிய கட்டபொம்மன் நேரடி வாரிசுகளின் சார்பில் பாளையங்கோட்டையிலுள்ள பாளை பிஷப் சார் ஜென்ட் மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கினர்.