விருதுகளை வாரிக்குவிக்கும் மாணவி சாத்விகா! - வாழ்த்துங்கள் வளரட்டும்.
கோவை, குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த 6-ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி சாத்விகா சிலம்பாட்டம்,பரதம்,ரன்னிங்,கராத்தே போன்ற பல்வேறு விளையாட்டி போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார். இதுபோல் பலதுறைகளில் சாதித்துவருபவர்களை அடையாளம் கண்டு கௌரவிக்கும் வகையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த பசுமை வாசல் பவுண்டேஷன், சென்னையைச் சேர்ந்த தேசிய மக்கள் உரிமைகள் இயக்கம், அக்னி பெண்கள் தமிழ்ச்சங்கம்- தமிழ்நாடு, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கம்பர் இளைஞர் நற்பணி மன்றம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை நடத்திய சுதந்திர தின சிறப்பு விருதுகள்-2021 வழங்கப்பட்டது. இதில் மாணவி சாத்விகாவிற்கு வீரபாண்டிய கட்டபொம்மன் விருது வழங்கி கௌரவித்தது. மாணவி சாத்விகா மென்மேலும் பல வெற்றிகளை பெற வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.