🔴 LIVE | முப்பெரும் விழா 2023


செப்'6 இடஒதுக்கீடு மீட்பு திண்ணைப்பிரச்சாரத்தில் தொட்டிய நாயக்கர்கள் தீவிரம்!

வன்னியர் 10.5 விழுக்காடு உள்ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் "சமூகநீதி கூட்டமைப்பு" சார்பில் சென்னையில் வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி மிக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்திற்கான ஆயத்தப்பணிகள் நாமக்கல் மாவட்டத்தில் விடுதலைகளம் மற்றும் தொட்டிய நாயக்கர் கல்வி அறக்கட்டளை சார்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக தொட்டிய நாயக்கர் சமூகம் வசிக்கும் கிராமங்களில் திண்ணைப்பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.


நேற்று  அப்பிநாயக்கபாளையம்,  திண்டமங்கலம் ஆகிய இடங்களில் நடைபெற்ற திண்ணைப் பிரச்சாரத்தில் அறக்கட்டளை தலைவர் மு.பழனிசாமி,சமூக நீதி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சின்னுசாமி, பொருளாளர் மணி, காந்தியவாதி ரமேஷ், தங்கவேல் மற்றும் சமூக நீதி கூட்டமைப்பு மாவட்ட உறுப்பினர்கள் தாமரைச்செல்வன், சுப்பிரமணி ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்திற்கு ஊர்நாயக்கர் தலைமை வகித்தார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved