தொட்டியநாயக்கர்களின் சென்னை பேரணிக்கு அனுமதி?
தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 115 சமூகங்களிடமிருந்து களவாடப்பட்ட இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்கக்கோரி சென்னையில் செப்டம்பர் 06-ஆம் தேதி திங்கள்கிழமை மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக காவல்துறை அனுமதிகோரி சமூகநீதி கூட்டமைப்பின் சார்பில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது. இதில் ஜங்கம் அமைப்பு சார்பில் காவல்துறை மு.இணை ஆணையர் ராமதாஸ், சென்னை, வீ.க.பொ.ராஜகம்பள சமூதாய நலச்சங்கத்தின் சார்பில் பொதுச்செயலாளர் செந்தில்குமார் இராமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இப்பேரணிக்கு உரிய அனுமதி விரைவில் வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது