🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சென்னையை குலுக்கும் பேரணிக்கு ஆயத்தம்!

வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டால் தங்கள் சமுதாய குழந்தைகளின் எதிர்காலம் பாழ்பட்டுப்போயுள்ளது.  திமுக, அதிமுக என தொடர்ந்து மாறி மாறி 115 சமூகங்களுக்கு துரோகம் இழைத்துவருவது இச்சமூக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலும் ஒருசாதிக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் திமுக அரசு,  ஒட்டுமொத்த சமுதாயங்களின் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளது.  இவ்விரு கட்சிகளின் துரோகங்களை பொதுமக்களிடம் விளக்கி நாமக்கல் மாவட்ட அறக்கட்டளையின் திண்ணைப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அதேபோல் சென்னையில் பேரணி குறித்த ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது.  இதில் விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன்,  வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொருளாளர் எஸ்.ராமராஜூ, தொட்டிய நாயக்கர் மகாஜன சங்க பொதுச்செயலாளர் பிச்சைக்கனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved