விருப்பாச்சிக்கு அணிவகுக்கும் அமைச்சர்கள்! கோபாலருக்கு வீரவணக்கம்!
தீபகற்ப கூட்டணி அமைத்து ஆங்கிலேயர்களை தெறித்தோடச்செய்த மாவீரர் விருப்பாச்சி கோபால நாயக்கரின் 220-வது நினைவுநாள் நாளை (05.09.2021) ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. நாளை காலை 9 மணியளவில் தமிழக அரசு சார்பில் விருப்பாச்சியாருக்கு வீரவணக்கம் செலுத்த கூட்டுறவுத்துறை அமைச்சர். ஐ.பெரியசாமி அவர்களும், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர். அர.சக்கரபாணி அவர்களும் வருகைதரவுள்ளனர். அதுசமயம் தொட்டிய நாயக்கர் சமுதாய உறவுகள் பெருமளவில் கலந்துகொண்டு மாமன்னருக்கு புகழ்சேர்க்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்.
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.