கரூர், சேலம்,நாமக்கல், திருப்பூரில் புறப்பட்டது கம்பளத்தார்களின் முன்னத்து ஏர்!
வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட 115 சமுதாயங்கள் மற்றும் 146 பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் இணைந்து உருவாக்கியுள்ள "சமூகநீதி கூட்டமைப்பு" சார்பில் சென்னை, சின்னமலையில் இன்று காலை நடைபெறவுள்ள "சமூகநீதி பேரணி"க்கு தமிழகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தன்னெழுச்சியாக திரண்டுள்ளனர்.
தொட்டிய நாயக்கர் சமூகத்தின் சார்பில் திருப்பூர், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து தனி பேருந்துகள் மற்றும் வாகனங்களில் வந்துள்ளனர். கரூர், விருதுநகர், தூத்துக்குடி, தேனி,இராமநாதபுரம் மாவட்டங்களிலிருந்து பிற சமுதாய உறவுகளுடன் இணைந்து வந்துள்ளனர். மிகநீண்ட இடைவெளிக்குப்பிறகு பொதுப்பிரச்சினைக்காக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து தலைநகர் சென்னைக்கு வருவது இதுவே முதல்முறையாகும். இப்படை தோற்பின் எப்படை வெல்லும்!.