ஒரு கோடி கையெழுத்து முடிவல்ல தொடக்கம் தான்! தொடரட்டும் கையெழுத்து வேட்டை!
சென்னையில் நேற்று நடைபெற்ற சமூகநீதிப்பேரணி எதிர்பார்ப்பை விஞ்சும் அளவிற்கும், அரசை அச்சப்பட வைக்குமளவிற்கும் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அரசு போராட்டத்தைக்கண்டு அச்சப்பட்டதை கடைசிவரை போராட்ட இடத்தை உறுதி செய்யாமல் அலைக்கழித்ததும், சிறப்பு விருந்தினர்களை பங்கேற்கவிடாமல் பலதொடர்புகள் மூலம் நெருக்கடி கொடுத்ததையும் கேட்க முடிந்தது. நமது போராட்டம் கோரிக்கைகளை வலியுறுத்தி தானே தவிர அரசுக்கு எதிரானதல்ல என்பதை பலவழிகளில் அரசுக்கு உணர்த்தினாலும் குறிப்பாக இதுகுறித்து இன்றைய முதல்வர் தேர்தல் பிரச்சாரத்தில் அளித்த வாக்குறுதியே என்பதை உணர மறுக்கிறது.
இக்கூட்டத்தின் முடிவில் சமூகநீதி கூட்டமைப்பின் நிர்வாகிகள் தலைமைச்செயலகம் சென்று அரசு செயலாளரிடம் வழங்கினர். நான்கு கோடிக்கும் அதிகமுள்ள பிற்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் இருக்கையில் ஒருகோடி கையெழுத்து என்பது முதற்கட்டமே. இது தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு அனைத்து தரப்பு மக்களிடமும் கையெழுத்து பெற்று செவிசாய்க்க மறுக்கும் அரசுக்கு மக்களின் எண்ணங்களை வெளிப்படுத்த வேண்டும்.