சூத்திரன் விடுதலைக்கு சூத்திரம் வகுத்தவனே! தந்தை பெரியார்-143.
அந்நியரிடமிருந்து தேசத்திற்கு விடுதலை வேண்டுமென்று நாடே போர்க்கோலம் பூண்டிருந்த வேலையில் மானிட சமூகத்தின் விடுதலைக்காக தன் வாழ்நாளெல்லாம் தொண்டாற்றிய தந்தைப்பெரியாரின் 143-வது பிறந்தநாளில் போற்றி வணங்குகிறோம். எம் தாய், தந்தையும், முன்னோர்களும் எங்களுக்கு சொத்து, சுகத்தை திரட்டுவதில் முனைப்பு காட்டியிருக்கலாம். ஆனால் மானிட சமூகத்தில் கொத்தடிமைத்தனமும் வர்ணாசிரம பேதமும் சமூகநீதிக்கு எதிராக இருந்த காலகட்டத்தில், கல்வியே சமூகநீதிக்காண தீர்வு என்று கண்டு எமக்காக தீர்க்கமாக போராடியவர் எம் தந்தைப்பெரியார். சகோதரத்துவத்தை வளர்த்து தமிழகத்தில் வளர்ச்சி, அமைதி,வளம் காண அடித்தளமிட்டவர் தந்தைப்பெரியார். பெண்விடுதலை, சாதிமறுப்பு, சுயமரியாதை என சுரண்டல்களை விடுவிக்கும் சூத்திரங்களைக்கண்டு நவீன காலத்திற்கு தமிழகத்தை நகர்த்திய பெரும் புரட்சியாளர் தந்தைப்பெரியாரின் 143-வது பிறந்தநாளில் நன்றியுடன் நினைவுகொள்கிறோம். உங்கள் உழைப்பால் நாங்கள் பலனடைந்தோம்! நன்றி மறவோம்!