🔴 LIVE | முப்பெரும் விழா 2023


செங்குளம் கோவில் பிரச்சினையில் விருதுநகர் ஆட்சியரிடம் விடுதலைக்களம் மனு!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், செங்குளம் ஊராட்சியில் உள்ள காளியம்மன் கோவிலில் 300 ஆண்டுகாலமாக கம்பளத்தார், வண்ணார், நாவிதர், ஆசாரி சமூகங்களோடு இணைந்து  வழிபட்டு வருகின்றனர். இந்த பாரம்பரிய உரிமைமிக்க இக்கோவிலில் பீடம் அமைக்க கிராமத்தினர் ஒருமனுதாக தீர்மானித்து பொதுமக்கள் நன்கொடையுடன் பணியை தொடங்கிய நிலையில், இந்த கிராமத்திலிருந்து பலஆண்டுகளுக்கு முன் வெளியூருக்கு குடிபெயர்ந்த ஒருவர் அதிகாரிகளுக்கு அனுப்பிய புகாரை மையமாக வைத்து அதிகாரிகள் வாய்மொழியாக தடை ஏற்படுத்தி வருகின்றனர். அதிகாரிகளின் இந்த அத்துமீறலைக் கண்டித்து விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் தலைமையில் நூற்றுக்கும் பேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு அளித்தனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved