🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நீதிமன்றத்தில் தொடரும் வழக்கு விசாரணை!

வன்னியர் 10.5 விழுக்காடு உள்ஒதுக்கீட்டிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணை கடந்த 20-ஆம் தேதிமுதல் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதியரசர் துரைசாமி மற்றும் நீதியரசர் முரளி சங்கர் அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. 20-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்பொழுது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் விஜயன், ராகவாச்சாரி ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். அதனைத்தொடர்ந்து தினம்தோறும் பிற்பகலில் நடைபெற்று வரும் விசாரணையில் மற்ற மனுதாரர்களின் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதங்களை வைத்து வருகின்றனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved