தொட்டிய நாயக்கர்களுக்கு DNT சான்றிதழ் மறுப்பு! - விடுதலைக்களம் போராட்டம்!
திருநெல்வேலியில் இருந்து பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தில் தொட்டிய நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பல கிராமங்களில் வசித்து வருகின்றனர். இம்மாவட்டத்திலுள்ள தொட்டிய நாயக்கர் சமூகத்தினர் DNT பட்டியலில் வருகின்றனர். இம்மக்களுக்கு DNT சான்றிதழ் வழங்குவதற்கு அரசு தெளிவான உத்தரவு பிறப்பித்திருந்தும் அதிகாரிகள் DNT சான்றிதழ் வழங்க மறுத்துவருகின்றனர். குறிப்பாக சிவகிரி வட்டத்தில் மட்டும் DNT சான்றிதழ்கோரி விண்ணப்பிக்கப்பட்ட 25-க்கும் மேற்பட்ட மனுக்கள் ஒரேநேரத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் சேர்க்கை நடைபெற்றுவரும் நிலையில் அதிகாரிகள் பொறுப்பற்று நடந்துகொள்வது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியதாக்கியுள்ளது.
அரசாணையை நிறைவேற்றாத அதிகாரிகளின் எதோச்சதிகாரப்போக்கை கண்டிக்கும் வண்ணம் வரும் அக்டோபர்-25-ஆம் தேதி சிவகிரி வட்டாட்சியர் அலுவலகம் முன் விடுதலைக்களம் கட்சியின் நிறுவனதலைவர் கொ.நாகராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டத்தில் தென்காசி மாவட்டத்திலுள்ள சுற்றுவட்டார கிராமமாக மக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு நமது உரிமையை மீட்டெடுக்க துணைபுரியுமாறு கேட்டுக்கொள்கிறோம்.