🔴 LIVE | முப்பெரும் விழா 2023


திராவிட இயக்கத்தீரர் க.சுப்பு! 10-ஆம் ஆண்டு நினைவையொட்டி முரசொலி புகழாரம்!

இராஜம்பளத்தார் சமுதாயத்தின் பெருந்தலைவர், சட்டமன்ற கதாநாயகன் , மிகச்சிறந்த தொழிற்சங்கவாதி, வழக்கறிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர் என பல்துறையிலும் கோலேச்சிய கம்பளத்தார் சமுதாயம் இதுவரை கண்டதும், கொண்டதுமான ஒரே ஆளுமைமிக்க தலைவர் அமரர் க.சுப்பு அவர்களின் 10-ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று, திராவிட முன்னேற்றக்கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி "திராவிட இயக்கத்தீரர்" என்ற தலைப்பில் புகழாரம் சூட்டி புகழ் வணக்கம் செலுத்தியுள்ளது.


அன்னாரின் நினைவுநாளையொட்டி சமுதாயத் தலைவர்களும், அமைப்புகளும் அவரது புகழைப்போற்றி நினைவுகூர்ந்துள்ளன. அமரர்.க.சுப்பு அவர்களின் 10-ஆம் ஆண்டு நினைவுநாளில் அவருக்கு பகழஞ்சலி செலுத்தும் வகையில் சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் அதன் தோழமை அமைப்புகளுடன் இணைந்து இன்று மாலை 7 மணிக்கு "காணொளி புகழஞ்சலி" கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. அன்னாரின் புகழைப்போற்ற அனைவரையும் அழைக்கின்றோம்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved