திராவிட இயக்கத்தீரர் க.சுப்பு! 10-ஆம் ஆண்டு நினைவையொட்டி முரசொலி புகழாரம்!
இராஜம்பளத்தார் சமுதாயத்தின் பெருந்தலைவர், சட்டமன்ற கதாநாயகன் , மிகச்சிறந்த தொழிற்சங்கவாதி, வழக்கறிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர் என பல்துறையிலும் கோலேச்சிய கம்பளத்தார் சமுதாயம் இதுவரை கண்டதும், கொண்டதுமான ஒரே ஆளுமைமிக்க தலைவர் அமரர் க.சுப்பு அவர்களின் 10-ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று, திராவிட முன்னேற்றக்கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி "திராவிட இயக்கத்தீரர்" என்ற தலைப்பில் புகழாரம் சூட்டி புகழ் வணக்கம் செலுத்தியுள்ளது.