அன்னை தெரசா விருது பெறும் தலைவிக்கு வாழ்த்துகள்!
தமிழ்நாடு-புதுச்சேரி பத்திரிக்கையாளர் சங்கம் மற்றும் புதுவை தேசம் பத்திரிக்கையின் சார்பில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இன்று புதுவையில் நடைபெறும் 12-வது விருது வழங்கும் விழாவில், முன்னாள் குடியரசு தலைவர். அப்துல்கலாம் பெயரில் ஜூனியர்ஸ் விருது, பெருந்தலைவர் காமராஜர் பெயரில் கிங்மேக்கர் விருது , கலைஞர் பெயரில் சாணக்கியர் விருது, அன்னை தெரசா பெயரில் நற்பணி சிகரம் விருது, காந்திஜி பெயரில் உள்ளாட்சி உத்தமர் விருது, டாக்டர் இராதாகிருஷ்ணன் பெயரில் கல்வி வித்தகர் விருது, டாக்டர் அம்பேத்கார் விருது என பல்வேறு பெயர்களில் வழங்கப்படும் விருதுகளுக்கு தமிழகம் மற்றும் புதுவையிலிருந்து விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு புதுவை முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் தமிழிசை ஆகியோர் விருது வழங்குகின்றனரர்.
இதில் தமிழகத்தில் சிறந்த ஊராட்சி மன்றத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இராமநாதபுரம், கமுதி ஒன்றியம், கீழராமநதி ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.பழனி அழகர்சாமிக்கு, அன்னை தெரசா பெயரில் வழங்கப்படும் "நற்பணி சிகரம்" விருது வழங்கப்படவுள்ளது.
இவ்விருதுபெரும் திருமதி.அழகர்சாமி தனியார் அமைப்பின் சார்பில் சிறந்த ஊராட்சி மன்ற தலைவருக்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு சமீபத்தில் பெங்களூருவில் நடந்த விழாவில் கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.