சிறப்புடன் நடைபெற்ற விருப்பாச்சியாரின் 220-வது வீர வணக்கநாள் நிகழ்ச்சி!
விருப்பாச்சி கோபாலநாயக்கரின் 220-வது வீரவணக்கநாள் நேற்று விருப்பாச்சியில் உள்ள மணிமண்டபத்தில் விடுதலைக்களம் சார்பில் அனுசரிக்கப்பட்டது. விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கோபால நாயக்கர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இநிகழ்ச்சியில் நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, கொங்கு இளைஞர் பேரவையின் ஜெகநாதன், தொழுவா நாயக்கர் மகாஜன சங்கத்தலைவர் தங்கப்பாண்டி, தமிழ்மாநில நாயுடு பேரவைத்தலைவர் கிருஷ்ணசாமி, விடுதலைக்களம் கட்சியின் நிர்வாகிகள் சரவணன், ரமேஷ், பாலசுப்பிரமணியம், ரங்கசாமி மற்றும் பூவரசி ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
செய்தி உதவி: நாமக்கல் ரமேஷ்.