🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மதுரை, தேனி மாவட்டத்திலும் DNT சான்றிதழ் வழங்குக! - மாவட்ட ஆட்சியரிடம் மனு!

தேனி மாவட்டத்தில் தொட்டிய நாயக்கர் சமுதாய மக்களுக்கு DNC/DNT சான்றிதழ் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் இராஜகம்பளத்தார் கட்டபொம்மன் தென்மண்டல செயலாளர் சௌந்திர பாண்டியம் மனு அளித்துளார். அதில் அவர் கூறியிருப்பதாவது.

தொட்டிய நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த எங்கள் மக்கள் தேனி மாவட்டம் முழுவதும்100க்கும் மேற்பட்ட கிராமங்களில் அடர்த்தியாக வாழ்ந்து வருகின்றனர். கல்வி, சமூக பொருளாதாரம் நிலைகளில் மிகவும் பின் தங்கிய நிலையில் தான் எங்கள் சமூகம் உள்ளது என்பதை தாங்களும் அறிவீர்கள்.

சீர்மரபினர் பட்டியலில் உள்ள 68 சாதிகளில் எங்களின் தொட்டிய நாயக்கர் சமுதாயமும் உள்ளது. எனவே எங்கள் சமூக மக்கள் கல்வி, வேலை வாய்ப்புகளில் சலுகைகள் பெற்று பொருளாதார நிலையில் மேம்படுவதற்கு அவர்களுக்கு நமது தேனி மாவட்டத்தில் DNC/DNT சாதிச் சான்றிதழ் வழங்கிட அரசாணை எண் 28 பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் நலத்துறை 8.03.2019 ன் படியும் அருள் கூர்ந்து பரிந்துரை செய்திட வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved