கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு கம்பளத்தாரின் வாழ்த்துகள்!
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் 1972-இல் கண்டெடுக்கப்பட்டு, புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களால் மீட்டெடுக்கப்பட்டு, கோடானுகோடி தொண்டர்களால் வளர்த்தெடுக்கப்பட்டு, அரைநூற்றாண்டு கால திராவிட இயக்க ஆட்சியில், கால்நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் மண்ணை கட்டி ஆண்டு, தாய் தமிழகத்தை இந்தியாவில் முதன்மை மாநிலமாக தலைநிமிரச்செய்து, பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஆலமரமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திரு.ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி.திரு.க.பழனிச்சாமி ஆகியோருக்கு தமிழகத்தில் வாழும் 40 லட்சம் கம்பளத்தார்கள் சார்பில் வாழ்த்துகள்.
இதேபோல், கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக தேர்வுசெய்யப்பட்டுள்ள திரு.ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் திரு.ஈபிஎஸ் ஆகியோருக்கு அருப்புக்கோட்டை காசிராஜன், கோவை சிவசாமி, கே.டி.மோகன்ராஜ் உள்ளிட்ட பல கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.