கோலாகலமாக துவங்கியது மாவீரனின் 263-வது பிறந்தநாள்!
இந்திய விடுதலைக்கு முதல் முழக்கமிட்ட பாஞ்சை வேந்தன் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 263-வது பிறந்தநாள் இன்று காலை கோலாகலமாக துவங்கியது.
மாவீரன் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட பல்வேறு அமைப்புகள் மாநிலம் முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளன. அதேபோல் பல்வேறு கட்சித்தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற முன்னாள், இந்நாள் உறுப்பினர்கள், அமைப்பினர், சமுதாய தலைவர்கள் மாவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
மதுரையில் மாநில அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.இராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மதிமுக தலைமை கழக செயலாளர் துரைவைகோ உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதவிர ஆர்.எம்.ஆர் பாசறை தலைவர் இராமமோகன் ராவ் மதுரை மற்றும் திண்டுக்கல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இதுதவிர கோவை, ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், தூத்துக்குடி, இராமநாதபுரம், திருச்சி, சேலம், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பல்வேறு கட்சித்தலைவர்கள், சமுதாய தலைவர்கள் மாவீரன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.