🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தேர்தல் களத்தில் மோதும் கம்பளத்தார்கள்!

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள ஆயக்குடி பேரூராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடுகின்றார் திரு.N.வீரபாண்டியன். இவருக்கு தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கரூர் மாநகராட்சி 48-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் அம்மன் ஆர்.சுரேஷ் போட்டியிடுகின்றார். அவருக்கு தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் வேட்புமனு தாக்கலின்போது "மோடி" போல் வேடமணிந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.இவருக்கு தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 6-வது வார்டில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு  தேசிய திராவிட முற்போக்கு கழகத்தின் சார்பில் போட்டியிடுகின்றார் திர்.மோகன்ராஜ் அவர்கள். அவருக்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 17-வது வார்டில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றார் திரு.R.மாரிச்சாமி. இவர் அக்கட்சியின் கிளை தலைவராக உள்ளார். திரு.மாரிச்சாமிக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் தாமரை.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved