முதுபெரும் தலைவரின் முதலாமாண்டு தினம் அனுசரிப்பு
இராஜகம்பள மகாஜன சங்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அமைப்பின் பொருளாளர் பொறுப்பு வகித்தவருமான அமரர். சங்கையா நாயக்கர் அவர்களின் முதலாமாண்டு நினைவுநாள் இன்று விடுதலைக்களம் கட்சியின் சார்பில் அனுசரிக்கப்பட்டது.
விடுதலைக்களம் கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் தலைமையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்சியில் அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.
இதில் நாமக்கல் நகர செயலாளர் சி.பாலசுப்பிரமணியம், தலைமை அலுவலக செயலாளர் மோகன். மோகனூர் ஒன்றிய இளைஞரணி சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.