🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வன்னியர் இடஒதுக்கீடு- உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் 8/2021 சட்டத்தை உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த நவம்பர் மாதம் ரத்து செய்தது. 

இத்தீர்ப்புக்கு தடைகோரி தமிழக அரசும், பாட்டாளி மக்கள் கட்சியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஷ்வரராவ் தலைமையிலான அமர்வில் நடைபெற்ற விசாரணையில் தடை கோரும் மனுவை நிராகரித்து, வழக்கின் இறுதி விசாரணை பிப் 15,16 தேதிகளில் நடைபெறும் என்றும், இரு தரப்பும் இறுதி வாதத்தை பிப் 10-க்குள் தாக்கல் செய்யவேண்டும் என்றும், யாரும் கால அவகாசம் கேட்கக்கூடாது என்ற நிபந்தனையும் விதித்தது. அதனடிப்படையில் வழக்கு விசாரணை இன்று நடைபெறுகிறது.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved