நகர்ப்புற உள்ளாட்சியில் வெற்றிக்கனியை பறித்த கம்பளத்தார்கள்!
கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும்பணி நேற்று நடைபெற்றது. இதில் ஆளும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் கூட்டணிக்கட்சிகள் 90 விழுக்காடு இடங்களுக்கு மேலாக வெற்றிபெற்று வரலாற்றுச்சாதனை புரிந்தது. இத்தேர்தலில் தமிழகம் முழுவதும் கம்பளத்தார்கள் ஆங்காங்கே போட்டியிட்டனர். போட்டியிட்டவர்களில் 80 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் வெற்றி பெற்றுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புதூர் பேரூராட்சிக்குட்பட்ட வார்டு உறுப்பினர் தேர்தலில் அதிமுக சார்பில் 10-வது வாடில் போட்டியிட்ட திருமதி.சு.சித்ராதேவி, 12-வது வார்டில் போட்டியிட்ட திருமதி.அ.மலர்க்கொடி, 13-வது வார்டில் போட்டியிட்ட திரு.நா.முனீஸ்வரன் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு பேரூராட்சிக்குட்பட்ட வார்டுகளில் திமுக சார்பில் போட்டியிட்ட திருமதி.பிரியதர்ஷினி, திருமதி.செல்வராஜ், திரு.செல்வராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், சலங்கபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட 13-வது வார்டில் திமுக சார்பில் நா.மாருசாமி வெற்றிபெற்றுள்ளார்.