பேரூராட்சி தலைவர் பதவி? மோதும் கண்மணிகள்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மேயர், நகரமன்றத் தலைவர், பேரூராட்சி மன்ற தலைவர் பதவிகளை பெறுவதற்கான ரேஸ் தொடங்கியுள்ளது.
இப்போட்டியில் கம்பளத்தார்கள் குறிப்பாக பெண்களுக்கான வாய்ப்புகள் பேரூராட்சிகளில் இருப்பதாக தெரிகிறது. வழக்கம்போல் ஆண்களைக்காட்டிலும் அதிகமான மகளிர்கள் இம்முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தென்மாவட்டங்களில் இரு பேரூராட்சிகளிலும், மத்திய மாவட்டத்தில் ஒரு பேரூராட்சி, மேற்கு மண்டலத்தில் ஒரு பேரூராட்சி என மொத்தம் 4 பேரூராட்சிகளில் வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.