🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மாவட்டம் தோறும் மருத்துவ முகாம் நடத்த தீவிர முயற்சி!

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. நோய்நாடி நோய்முதல்நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் என்பது குறள் (குறல் எண்:948, அதிகாரம்:மருந்து). பொருளாதார கட்டமைப்பில் மருத்துவத்துறையில் புழங்கும் பணப்புலக்கம் மிகமுக்கியமானதும், நிரந்தரமானதுமான ஒன்று. நவீன முதலாளித்துவ உலகில் 40-க்குப் பிந்தைய மனித வாழ்க்கையில் மருத்துவத்திற்கு செலவிடும் தொகை குடும்ப வருவாயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. எனவே நோய்கள் மற்றும் மருத்துவம் குறித்தான விழிப்புணர்வு அதிகம் தேவைப்படும் காலமாக இருக்கிறது. அத்தேவையை முன்கூட்டியே கண்டறிந்து குறைந்த செலவில் தரமான மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்குவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.

அந்தவகையில் சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் நமது சமுதாய மருத்துவர்களைக்கொண்டு காணொளி மூலமாக இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. இதில் அடுத்த கட்ட நகர்வாக  மக்களுக்கு நேரடியாக மருத்துவமுகாம் மூலம் ஆலோசனை வழங்கவும், குறைந்த செலவில் பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கிட நமது மருத்துவர்கள் உதவியுடன் நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை, தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கல்வி அறக்கட்டளை, விடுதலைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து நடத்திட முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved