🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சிலம்பாட்ட போட்டியில் தங்கபதக்கம் வென்ற கண்மணிகள்.

கோவாவில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில், தேனி மாவட்டத்திலுள்ள தீபம் அறக்கட்டளை சிலம்பம் பயிற்சி பள்ளியின் சார்பாக கலந்துகொண்ட ஒன்பது மாணவர்கள் சிறப்பாக சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளனர். தங்கப்பதக்கம் வென்று சாதனை நிகழ்த்தியுள்ள அரசுப்பள்ளி மாணவர்களான M.ஸ்ரீமந்த் கிருஷ்ண S/o. திரு.மயில்சாமி & திருமதி.கணேஸ்வரி, P.அக்ஷயக்குமார் S/o. திரு.பரமசிவம் & திருமதி. ஜெயராணி, C.சுரேந்திரபாண்டியன் S/o. திரு.செல்லசாமி & திருமதி. மஹாலக்ஷ்மி ஆகியோர் சொந்த ஊரான தேனி மாவட்டம் சத்திரப்பட்டி திரும்பினர். அப்பொழுது கிராமத்திற்கு பெருமை சேர்த்துள்ள மாணவச்செல்வங்களை ஊர்பொதுமக்கள் திரளாக ஒன்றுகூடி வானவேடிக்கைகள் முழங்க, மாலை அணிவித்து மரியாதை செய்து ஊர்வலமாக அழைத்து சென்றனர். வீரபாண்டி பேரூராட்சி 8-வது வார்டு கவுன்சிலர். திருமதி.பிரசாந்தினி ஜெயச்சந்திரன் தங்கப்பதக்கம் வென்று திரும்பிய மாணவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்கூறி பாராட்டினர்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved