மக்கள் நலப்பணியில் வழிகாட்டும் திமுக நாமக்கல் ஒன்றிய துணைச்செயலாளர்!
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணைப்படி வருமுன் காப்போம் திட்டம் நாமக்கல் ஒன்றியம் திண்டமங்கலம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நாமக்கல் தி.மு.க ஒன்றிய துணைச் செயலாளரும் திண்டமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவருமான K.P.இராமசாமி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் சுகாதார மருத்துவர், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதில் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பலன் பெற்றனர்.
திண்டமங்கலம் ஊராட்சிமன்ற தலைவர் K.P.இராமசாமி ஆட்சிப்பொறுப்பில் எந்தக்கட்சி இருந்தாலும் அரசின் திட்டங்களை தன் ஊராட்சிக்கு தட்டிச்செல்வதில் கெட்டிக்காரர் என பெயரெடுத்தவர். தற்பொழுது அவர் சார்ந்தி கட்சி ஆளும் கட்சியாக இருப்பதால் கூடுதல் முனைப்புடன் செயல்பட்டு நலத்திட்டங்கள் வழங்குவதாக மக்களின் பாராட்டைப்பெறுகிறார்.