அனைவருக்கும் சித்திரை திருநாள் நல்வாழ்த்துகள்!
தொட்டிய நாயக்கர்.காம் இணையதள வாசகர்கள், சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் உறுப்பினர்கள், நன்கொடையாளர்கள், சமுதாய சேவகர்கள் அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துகள்.
இதேபோல், இந்த இனிய சித்திரைத் திருநாளில் நீதிமன்றங்களில் போராடி மீட்டெடுத்த இடஒதுக்கீட்டை பாதுகாக்க அனைவரும் உறுதி ஏற்போம் என்று நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் அரசியல் எழுச்சியே சமுதாயம் அடுத்தகட்டத்திற்கு முன்னெடுக்கும் அடித்தளமாக இருக்கும். அதை வென்றெடுக்க இந்த சித்திரை நன்நாளில் உறுதியேற்று வெற்றி கொள்வோம் என விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், திருப்பூர் நுரையீரல் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும், தலைமை மருத்துவருமான பொம்முசாமி அவர்கள் சமுதாய மக்கள் அனைவரும் நலமோடும், வளமோடும் வாழ இந்த சித்திரை திருநாளில் வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.