கடுமையான போலீஸ் கெடுபிடி! திட்டமிட்டபடி கோட்டை முற்றுகை!
தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 261 சமுதாயங்கள் அழைப்பு விடுத்துள்ள கோட்டை முற்றுகை போராட்டத்தை நசுக்க போலீசார் முழுவீச்சில் களமிறங்கியுள்ளனர். நேற்று காலையில் இருந்தே முக்கிய தலைவர்களிடம் பேசிவரும் உளவுத்துறை போலீசார் இருப்பிடங்கள் குறித்த தகவல்களையும், போராட்டக்காரர்கள் எங்கு கூடுகின்றனர் உள்ளிட்ட தகவல்களை கேட்ட வண்ணம் உள்ளனர்.
போலீசாரின் கடுமையான நெருக்கடிகளை முறியடித்து கோட்டையை முற்றுகையிட்டே தீர்வது என்ற உறுதியுடன் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சமுதாய மக்கள் சென்னை வந்தவண்ணம் உள்ளனர்.
தொட்டிய நாயக்கர் சமூகத்தின் சார்பில் விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் இப்போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.
கடைசியாக கிடைத்த தகவலின்படி விடுதலைக்களம் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.