ஜமீன் ராமபட்டிணத்தில் சித்திரை திருச்சாட்டு விழா!
பொள்ளாச்சி அருகேயுள்ள ஜமீன் ராமபட்டிணம் கிராமத்தில் அருள்மிகு உச்சி மாகாளியம்மன் கோவில் ஸ்ரீ கருப்பசாமி திருக்கோவில் சித்திரை திருச்சாட்டு விழா கடந்த செவ்வாய்க்கிழமை (19.04.2022) தொடங்கியது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
இதன் தொடர்ச்சியாக நாளை (24.04.2022) ஞாயிற்றுக்கிழமை தெய்வகுளம் காளியம்மன் கோவிலுக்கு தீர்த்தம் எடுக்க புறப்படுகின்றனர். நாளை இரவு தெய்வகுளத்திலிருந்து தீர்த்த கலசங்களுடன் புறப்படும் பக்தர்கள் திங்களன்று ராமபட்டினத்தை வந்து சேர்கின்றனர்.
மீண்டும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் (26,27) திருவிழாவின் பிரதான நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. அதனையடுத்து வியாழக்கிழமை மஞ்சள் நீராட்டு விழாவும், இறுதியாக வெள்ளிக்கிழமை மகா அபிஷேகம் மற்றும் தீபாரதனையுடன் விழா நிறைவு பெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருவிழா குழுவினரும், பொதுமக்களும் சிறப்பாக செய்து வருகின்றனர்.