🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தேசிய நெடுஞ்சாலையில் மறியல்! கொ.நாகராஜன் கைது!

இன்று (29.04.2022) காலை 11.00 மணி அளவில், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசை வலியுறுத்தி, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நம்பர் 1 டோல்கேட் அருகே தென்னிந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 1000-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்போராட்டத்தில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் கொ.நாகராஜன், தொ.நா.அ.தலைவர் மு.பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசார் திருச்சியிலுள்ள அலங்கார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved