🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கொத்தப்புள்ளி ஊராட்சி கிராமசபைக்கூட்டத்தில் அமைச்சர், மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!

திண்டுக்கல் மாவட்டம் கொத்தப்புள்ளி ஊராட்சிக்குட்பட்ட பொம்மணங்கோட்டையில் மே-1 ஆம் தேதி கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கிராமசபைக் கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை  கண்காணிப்பாளர், ஒன்றியக்குழு பெருந்தலைவர்,துணைத்தலைவர், மாவட்டக்குழு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்துகொண்டு கிராம மக்கள் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.

இக்கிராம சபைக்கூட்டத்தில் ஊராட்சியில் நிறைவேற்ற வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிராசபைக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்றத்தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

கிராமசபைக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு அனைவரின் சார்பிலும் ஊராட்சி மன்றத்தலைவர் சுந்தரிஅன்பரசு அவர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved