ஜோதியில் திணறும் பாஞ்சை!
மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் குலதெய்வமும், கம்பளத்தாரின் ஆன்மீக முகமாகவும் உள்ள பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய சித்திரை திருவிழா இன்று கோலகலமாக துவங்கியது.
விழாவின் முதல்நாளான இன்று தென் மாவட்டங்களில் பல பகுதிகளில் இருந்து இளைஞர்கள் சாரை சாரையாக ஜோதியை ஏந்திய வண்ணம் அணிவகுத்துச் சென்று கொண்டுள்ளனர்.
இதேபோல் பாளையங்கோட்டையிலிருந்து புறப்படும் தொடர் ஜோதி ஓட்டத்தை மதிமுக மாவட்ட செயலாளர், மதிமுக துணைப்பொதுச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன், மாரிச்சாமி ஆகியோர் துவக்கி வைத்தார்.
வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற தொடர் ஜோதி ஓட்டத்தை த.வீ.க.பண்பாட்டுக்கழக மாநில தலைவர் திரு.R.வரதராஜன், விடுதலைக்களம் கட்சி நிறுவன தலைவர் கொ.நாகராஜன், திரு.வலசை கண்ணன், திரு.சுருளி மணி ஆகியோர் துவக்கி வைத்தனர்.