🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மாபெரும் பொதுக்கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி கம்பளத்தார்கள் வலியுறுத்தல்!

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கொட்டையூர் கிராமத்தில் நேற்று ( 5.6.2022 ) ஞாயிற்றுக்கிழமை அன்று, விடுதலைக்களம் கட்சியின் கிளை தொடக்க விழாவில், கொடியேற்றும் நிகழ்ச்சியும், மாபெரும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

விடுதலைக்களம் கட்சியின் திருச்சி மாவட்ட பொருப்பாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், விடுதலைக்களம் கட்சியின் நிறுவனத் தலைவர் கொ.நாகராஜன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.


நிறுவனத் தலைவர் கொ.நாகராஜன் பேசும்பொழுது, தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் கல்வியில் மேம்பாடடைந்து வருகின்ற போதும், அரசியல் எழுச்சியில் பின்தங்கி இருந்தது. ஆனால் தற்பொழுது அதில் பெரும் மாற்றம் ஏற்பட்டு வருவதாகவும், இதற்காக விடுதலைக்களம் கட்சி இருபதாண்டுகளாக போராடி வருவதாகவும் தெரிவித்தார். கல்வியில் மேம்பாடடைந்து வரும் அதேவேளையில் அரசுப்பணிகளில் இன்னும் போதுமான அளவில் கம்பளத்தார்கள் அமரமுடியவில்லை என்றும், இதற்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் 20 விழுக்காடு இடஒதுக்கீடை பாதுகாப்பது மிகவும் அவசியமென்று வலியுறுத்தினார். இடஒதுக்கீடை காக்க விடுதலைக்களம் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தியுள்ளது என்றும், இதற்கு சமுதாய மக்கள் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்.

அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி அவர்கள் பேசும்பொழுது, அரசியலில் மக்கள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென்றும், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தில் மிகப்பெரிய மோசடிகளையும், துரோகங்களையும் அரங்கேற்றியுள்ளனர் என்றும், இந்த மோசடிகள் குறித்து கம்பளத்தார் சமுதாயத்தினர் யாருக்கும் இதுவரை தெரியவரவில்லை என்றும், தற்பொழுது பல சமூகங்களோடு இணைந்து நமது உரிமகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். ஆகஸ்டு 07-இல் மதுரையில் நடைபெறும் சமூகநீதி மாநாட்டில் தொட்டிய நாயக்கர்கள் பெருமளவில் கலந்துகொண்டு நமது வலிமையை நிரூபிக்க வேண்டுமென்றும் வேண்டுகோள் வைத்தார். சாதிவாரிகணக்கெடுப்பை உடனடியாக நடத்தி, அதிகாரமற்ற சமூகங்களுக்கு கல்வி,அரசியல், வேலைவாய்ப்புகளில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கக்கோரி நடைபெறும் இம்மாநாட்டிற்குப்பிறகு தமிழக அரசியலின் போக்கில் மிகப்பெரிய மாற்றம் வரும் என்றார்.


இக்கூட்டத்தில். திருச்சி மாவட்ட மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்முகம், கிளை கௌரவதலைவர் மாச்சான், கிளைதலைவர் நல்லதம்பி, கிளைதுணைதலைவர் சந்திரமோகன், கிளை செயலாளர் பாலகுமார், கிளை துணை செயலாளர் ஈஸ்வரன், கிளை துணை செயலாளர் சண்முகம், கிளை பொருளாளர் சத்யராஜ், இளைஞரணிதலைவர் தம்பி(எ) செந்தில்குமார், இளைஞரணி துணைதலைவர் தேசிங்ராஜ் , இளைஞரணி செயலாளர் அருள்முருகன், இளைஞரணி துணை செயலாளர் வினோத் , ஒன்றிய பிரதிநிதிகள் செந்தில், தனசெல்வன் , குணசேகர், சக்திவேல், மணிகண்டராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும், இந்நிகழ்ச்சியில் விடுதலைக்களம் கட்சி மாநில பொறுப்பாளர் பூவரசி ராஜேந்திரன், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் பழனிச்சாமி, விடுதலைக்களம் கட்சி நாமக்கல் வடக்கு மாவட்ட தலைவர் துரை ரமேஷ், வடக்கு மாவட்ட செயலாளர் துரை சரவணன், வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பெரியூர் பூபதி, துணை அமைப்பாளர் மோகன் குமார், நாமக்கல் தெற்கு மாவட்ட தலைவர் OST மாதேஸ்வரன், தெற்கு மாவட்ட செயலாளர் நடராஜன், நாமக்கல் நகரச் செயலாளர் பாலசுப்பிரமணியன், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சந்தோஷ் குமார், இணையதள ஒருங்கிணைப்பாளர் தாளம்பாடி செல்வராஜ்,  பரமத்தி ஒன்றியத் தலைவர் போத்தன் மற்றும் விடுதலைக்களம் கட்சியின்  மாநில, மாவட்ட, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், கொட்டையூர் கிராம பொதுமக்கள் உட்பட ஐநூற்றுக்கும் மேற்பட்ட பலர் கலந்து கொண்டர். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved