இளம் தளிர் சாத்விகா-விற்கு வாழ்த்துகள்.
கோவை, குனியமுத்தூர் பகுதியச் சேர்ந்த மாரிமுத்து - மலர்கொடிதம்பதியினரின் மகள் சாத்விகா. அங்குள்ள People Bridge பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வரும் சாத்விகா, படிப்பில் படு சுட்டி என்று ஆசிரியர்களாலேயே பாராட்டப்படுபவர்.
படிப்பு மட்டுமல்லாது நாட்டியம், சிலம்பம், தடகளம் என பலதுறையிலும் சாதித்து வருவபர் சாத்விகா.
பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தனி முத்திரை பதித்துவரும் சாத்விகா, சிலம்பாட்டம் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்று குவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்றால் சாத்விகாவின் பதக்க வேட்டை சில வருடங்களாக தடைபட்டிருந்த சூழலில், தஞ்சாவூர் கலா வித்யாவில் இணைந்து பரதக்கலை பயின்று வந்த சாத்விகாவின் நாட்டிய அரங்கேற்றம் கடந்த ஆண்டு இறுதியில் அரங்கேற்றப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நேற்று கோவை, சந்திராபுரம் செங்காளியப்பன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சதங்கை ஒசை விழா நிகழ்ச்சியில் சாத்விகாவிற்கு வளர் இளம் நாட்டிய மயூரி விருது வழங்கப்பட்டது.
இளம் தளிர் சாத்விகாவின் சாதனைப் பயணம் தொடரட்டும்.