வழக்கறிஞர் பிரிவு தலைவராக திரு.தனபால் நியமனம்! பணிசிறக்க வாழ்த்துகள்!
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்மாநில தலைவராக அண்ணாமலை ஐபிஏஸ் நியமிக்கப்பட்டு ஏறக்குறைய ஓராண்டை நெருங்கும் நிலையில், மாநிலம் முழுவதும் பாஜகவிலுள்ள பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். எல்லா தரப்பு மக்களுக்கும் அரசியல் வாய்ப்புகளை வழங்குவதற்கு ஏதுவாக மீனவர் அணி, ஓபிசி அணி, விவசாய அணி, சிறுபான்மையினர் அணி, விருந்தோம்பல் அணி, அறிவுசார் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, வர்த்தக அணி என எண்ணற்ற அமைப்புகளை உருவாக்கி வாய்ப்புகளை வழங்கி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக இராஜகம்பளத்து தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினரும் பாஜகவில் இணைந்து வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். மாநில செயலாளர்,மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட பதவிகளை பெற்றுள்ள நிலையில், தற்பொழுது விருதுநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவராக திரு.P.தனபால் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
வழக்கறிஞர் பிரிவு தலைவராக திரு.தனபால் அவர்களை நியமனம் செய்ய பரிந்துரை மாநில தலைவர் அண்ணாமலை, அமைப்புச்செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்ட தலைவர்களுக்கும், மாவட்ட, மாநில நிர்வாகிகளுக்கும் இராஜகம்பளத்தார் சமுதாயத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.