தமிழக முதல்வருக்கு கொரோனா-பூரணநலம்பெற வாழ்த்துகிறோம்!
2021-சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த ஒராண்டுகாலமாக தினம்தோறும் ஏதாவது ஒரு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ஓயாமல் மக்கள் பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களாக வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், மக்களுக்கு நேரடியாக சந்தித்து நலத்திட்ட உதவிகளையும் வழங்கிவிட்டு சென்னை திரும்பினார்.
மீண்டும் 14,15 ஆம் தேதிகளில் திருப்பூர், கோவை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதல்வர் இன்று உடற்சோர்வு சற்று இருந்தது.பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானதாக தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் பூரணநலம் பெற்று மக்கள் பணியாற்றிட வேண்டுமாய் இராஜகம்பளத்தார் சமுதாய மக்களின் சார்பில் வாழ்த்துகிறோம்.