அமைப்புச்செயலாளர் நியமனம்! - நேரில் வாழ்த்தினார் மாணவரணி செயலாளர்.
மிகுந்த பரபரப்பு, வழக்குகள், தடைகளைத் தாண்டி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுக்கூட்டம் கடந்த ஜூலை'11-ஆம் தேதி சென்னை வானகரத்திலுள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் அதிமுக-வின் இடைக்கால பொதுச்செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து கட்சியின் பல்வேறு பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து அறிவிப்பு வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக கட்சியின் அமைப்புச்செயலாளர்களில் ஒருவராக திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ப.பெஞ்சமின் நியமிக்கப்பட்டார். அவருக்கு திருவள்ளுவர் மத்திய மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் கார்த்திகேயன் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.